Saturday, October 1, 2011

தேவதைகள் மனிதர்களை காதலிப்பார்களா?

அன்று சனிக்கிழமை, காலை கல்லூரிக்கு செல்ல பேருந்தில் ஏறும்போதுதான் அவளை முதல் முறையாக பார்த்தேன். அவளை பார்த்தவுடன் காதல் வருகிறதோ இல்லையோ, கவிதை வரும். நீங்கள் கலிநடனம் பார்த்திருக்கலாம், கவிதை நடனம் அவளிடம் மட்டும் தான் பார்க்க முடியும். என் வாழ்வில் நான் பார்த்த மொத்த அழகும் சேர்ந்து இருப்பது போல் இருந்தாள். என்றுமே பேருந்து படியில் பயணிக்காத நான் அன்று அவளை கான்பதற்காகவே படியில் தொங்கிக்கொண்டு வந்தேன். அங்கிருந்து தான் அவளை முழுமையாக பார்க்க முடியும், இல்லை, இல்லை, முறையாக பார்க்க முடியும், ஒளிந்து கொண்டே. இருந்தும் ஒரு முறை நான் அவளை பார்ப்பதை அவள் கவனித்து விட்டாள், உடனே ஒரு வெட்கத்தை மட்டுமே சிந்தி குனிந்து கொண்டது தான் தாமதம், அவள் சிந்திய வெட்கம் ஓடி வந்து என்மேல் ஏறிக்கொண்டது. நானும் வெட்கத்தில் தலை குனிந்து கொண்டேன். அந்த பயணம் எவ்வளவு நேரம் தொடர்ந்தது என்று தெரியாது, எங்கே தெரிவது, எனக்கு அவள் மட்டும் தானே தெரிகிறாள். நான் இரங்க வேண்டிய நிறுத்தமே என் நன்பன் சொல்லித்தான் தெரிந்தது. அந்த பயணம் இன்று வரை தொடர்கிறது, அவள் நினைவுகளோடு. ஆணால் ஒன்று அந்த பயனத்தில் இருந்து தான் என் காதல் பயணம் தொடங்கியது. இதை நான் எழுதும் நாள் வரை அவளிடம் என் காதலை சொல்லவில்லை. எப்போது சொல்வேன் என்று தெரியாது, ஏன் பெயர் கூட இன்று வரை தெரியவில்லை. அவள் என் காதலை ஏற்றுக்கொள்வாளா என்றும் தெரியவில்லை. நீங்களே சொல்லுங்கள் தேவதைகள் மனிதர்களை காதலிப்பார்களா?

No comments:

Post a Comment