Thursday, September 29, 2011

அவளும் என் கவிதைகளும்...

நான் எழுதும்
சுமாரான கவிதைகள் கூட
அற்புதமான கவிதை ஆகி விடுகிறது,
நீ படிக்கும்போது...

உன் தோழிகள் அனைவரும்
பூ வைத்துள்ள போதும்,
நீ சூடிய பூ மட்டும்
பூவின் மீது பூத்த
பூ மாதிரி தெரிகிறது...

எவ்வளவு முயற்ச்சித்தும்
எழுத முடியவில்லை,,
உன் கண்களுக்கு
ஈடான கவிதையை....

என்ன இது,
உன் வெட்கத்திலிருந்து பிறக்கும்
கவிதைகளுக்கு
உன்னை போல
வெட்கப்பட தெரிவதில்லையே...

உன் காதலுக்கு
என் கவிதைகள் தேவைபடுகிற்தோ
இல்லையோ
என் கவிதைகளுக்கு
உன் காதல் தேவை...

எப்படியாவது
உன் கைகுட்டையை
திருடிவிட வேண்டும்,
அதில் தானே துடைத்து வைதுள்ளாய்
உன் முகத்தில் வழியும்
கவிதைகளை...

உன்னிடத்தில் என்
நண்பர்கள் பேசும்போதெல்லாம்
ஆச்சர்யமாக உள்ளது,
இப்படி கவிதை மழையில்
நனைந்தும்
ஒன்றும் ஆகாமல் இருக்கிறார்களே...

இப்படிக்கு,
முழு நேரக் காதலன்...

No comments:

Post a Comment