Monday, September 26, 2011

பூக்களின் தற்கொலை

உன் கூந்தல் வாசனை
நீ சூடிய பூவின் வாசனையை
வீழ்த்தி விட்டதோ என்னவோ?
ஒவ்வொரு பூவாக உதிர்கிறதே...

கொஞ்சம் இடைவெளி விட்டு
வெட்கப்படேன்,
இப்படி தொடர்ந்து வெட்கப்பட்டால்
எப்படி பொறுக்குவது,,
உன் வெட்கத்திலிருந்து உதிரும்
கவிதைகளை...

இப்படிக்கு
முழு நேரக் காதலன்...

No comments:

Post a Comment