
இபோதெல்லாம் கல்லூரிக்கு வருவதே படிப்பதற்காக என்பது போய் அவளை பார்பதற்க்காத்தான் என்றாகி விட்டது. தினமும் நான் ஏறும் பேருந்து நிறுத்திலிருந்து நான்கு நிருத்தங்களுக்கு அடுத்து தான் அவள் ஏறுவாள். நான் முதலிலேயே ஏறிவிடுவேன் என்ற போதும் அவள் ஏறிய பிற்கே என் மனம் பேருந்தில் ஏறும். அவள் மட்டுமல்ல, அவளுடன் வரும் அனைவருமே அழகாக தெரிகின்றனர். நம்க்கு நன்கு பிடித்த பாடலை லேசாக தூரத்தில் கேட்டாள் நாமும் கூடவே உச்சரிக்க ஆரம்பித்து விடுவோம், அது போல் தான் அழகான் பொருள்களை எங்காவது பார்த்தால் உன் பெயரை தானாகவே உச்சரிக்கிறது என் மனது. எனக்கொரு ஆசை அவள் பேருந்தில் ஏறியதும் வழக்கமாக நிற்கும் இடத்தில், ’தேவதைகள் நிற்கும் பகுதி’ என அறிவிப்பு பலகை மாட்ட வேண்டும். என்ன செய்ய உன் அழகை இப்படி விலகி இருந்தே விவரிக்க வேண்டியுள்ளது. எப்படியும் அவளிடம் சொல்லி விட வேண்டும் என்று தீர்மானதோடு தான் ஏறியிருக்கிறேன். இதோ என் முன்னால் தான் நிற்கிறாள்.
ஆணால் சொல்ல முயற்ச்சித்தும் வார்த்தைகள் மட்டும் வர மாட்டேன் என்கிறது, அவளுக்காக நேற்று இரவு எழுதிய அனைத்து கவிதைகளும் காலவதியாகின்றன அவள் அழகின் முன்னால். இருந்தும் ஒரு தயக்கம், பட்டாசு வெடிக்கும் சிறுவர்களை பார்த்திருக்கிறீர்களா? வெடியின் திரியில் தீயை வைக்க அருகில் செல்வார்கள், ஆணால் வைக்க மாட்டார்கள், வைத்துவிட்டதாக நினைத்து ஓடி விடுவார்கள், இப்படியே தான் செய்வார்கள். ஆணால் கடைசி வரை வைக்க மாட்டார்கள். அது போல் தான் நானும். எப்படி சொல்லவேன், ஒருவேளை அவள் மறித்து விட்டாள் என்ன செய்ய? எங்கோ படித்த கவிதை:
காதலிக்காதவர்களே காதலில் தோற்கிறார்கள்...
அப்படி என்றால் நிச்சயம் என் காதல் தோற்காது. ஏனென்றால் தபு சங்கர் சொன்னது போல நான் அவளை என் இதையத்தில் அல்ல, என் இதயமாக வைத்துள்ளேன். இதோ என் கல்லூரியும் வந்து விட்டது. இன்றும் என் காதல் சொல்லாத காதலாகவே உள்ளது..
No comments:
Post a Comment